thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalபிறனில் விழையாமைPiranil Vizhaiyaamai
குறள் 147

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்

பெண்மை நயவா தவன்.

Araniyalaan Ilvaazhvaan Enpaan Piraniyalaal

Penmai Nayavaa Thavan

He is the righteous householder His neighbour's wife who covets never

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே

SP (சாலமன் பாப்பையா)

அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்

MK (மு.கருணாநிதி)

பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்

Couplet

Who sees the wife, another's own, with no desiring eyeIn sure domestic bliss he dwelleth ever virtuously

Explanation

He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder