thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalபிறனில் விழையாமைPiranil Vizhaiyaamai
குறள் 146

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்.

Pakaipaavam Achcham Pazhiyena Naankum

Ikavaavaam Illirappaan Kan

Hatred, sin, fear, and shame-these four Stain adulterers ever more

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.

SP (சாலமன் பாப்பையா)

அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.

MK (மு.கருணாநிதி)

பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை

Couplet

Who home ivades, from him pass nevermore,Hatred and sin, fear, foul disgrace; these four

Explanation

Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour's wife