பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
Pakaipaavam Achcham Pazhiyena Naankum
Ikavaavaam Illirappaan Kan
Hatred, sin, fear, and shame-these four Stain adulterers ever more
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.
SP (சாலமன் பாப்பையா)
அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.
MK (மு.கருணாநிதி)
பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை
Couplet
Who home ivades, from him pass nevermore,Hatred and sin, fear, foul disgrace; these four
Explanation
Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour's wife