எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
Elidhena Illirappaan Eydhumenj Gnaandrum
Viliyaadhu Nirkum Pazhi
Who trifles with another's wife His guilty stain will last for life
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்
SP (சாலமன் பாப்பையா)
அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.
MK (மு.கருணாநிதி)
எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்
Couplet
'Mere triflel' saying thus, invades the home, so he ensuresA gain of guilt that deathless aye endures
Explanation
He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever