thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalபிறனில் விழையாமைPiranil Vizhaiyaamai
குறள் 148

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

Piranmanai Nokkaadha Peraanmai Saandrorkku

Aranondro Aandra Vozhukku

They lead a high-souled manly life The pure who eye not another's wife

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.

SP (சாலமன் பாப்பையா)

அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்

MK (மு.கருணாநிதி)

வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்

Couplet

Manly excellence, that looks not on another's wife,Is not virtue merely, 'tis full 'propriety' of life

Explanation

That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great