அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalஒழுக்கம் உடைமைOzhukkamutaimai
குறள் 139
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
Ozhukka Mutaiyavarkku Ollaave Theeya
Vazhukkiyum Vaayaar Solal
Foul words will never fall from lips Of righteous men even by slips
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.
SP (சாலமன் பாப்பையா)
மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.
MK (மு.கருணாநிதி)
தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்
Couplet
It cannot be that they who 'strict decorum's' law fulfil,E'en in forgetful mood, should utter words of ill
Explanation
Those who study propriety of conduct will not speak evil, even forgetfully