thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalஒழுக்கம் உடைமைOzhukkamutaimai
குறள் 139

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய

வழுக்கியும் வாயாற் சொலல்.

Ozhukka Mutaiyavarkku Ollaave Theeya

Vazhukkiyum Vaayaar Solal

Foul words will never fall from lips Of righteous men even by slips

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.

SP (சாலமன் பாப்பையா)

மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.

MK (மு.கருணாநிதி)

தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்

Couplet

It cannot be that they who 'strict decorum's' law fulfil,E'en in forgetful mood, should utter words of ill

Explanation

Those who study propriety of conduct will not speak evil, even forgetfully