thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalஒழுக்கம் உடைமைOzhukkamutaimai
குறள் 140

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்

Ulakaththotu Otta Ozhukal Palakatrum

Kallaar Arivilaa Thaar

Though read much they are ignorant Whose life is not world-accordant

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

SP (சாலமன் பாப்பையா)

முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே.

MK (மு.கருணாநிதி)

உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்

Couplet

Who know not with the world in harmony to dwell,May many things have learned, but nothing well

Explanation

Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant