thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalஒழுக்கம் உடைமைOzhukkamutaimai
குறள் 138

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்.

Nandrikku Viththaakum Nallozhukkam Theeyozhukkam

Endrum Itumpai Tharum

Good conduct sows seeds of blessings Bad conduct endless evil brings

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.

SP (சாலமன் பாப்பையா)

நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.

MK (மு.கருணாநிதி)

நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும் தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்

Couplet

'Decorum true' observed a seed of good will be;'Decorum's breach' will sorrow yield eternally

Explanation

Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow