அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalஒழுக்கம் உடைமைOzhukkamutaimai
குறள் 138
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
Nandrikku Viththaakum Nallozhukkam Theeyozhukkam
Endrum Itumpai Tharum
Good conduct sows seeds of blessings Bad conduct endless evil brings
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
SP (சாலமன் பாப்பையா)
நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.
MK (மு.கருணாநிதி)
நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும் தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்
Couplet
'Decorum true' observed a seed of good will be;'Decorum's breach' will sorrow yield eternally
Explanation
Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow