thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalபாயிரவியல்Paayiraviyalவான்சிறப்புVaansirappu
குறள் 13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி.

Vinindru Poippin Virineer Viyanulakaththu

Ulnindru Utatrum Pasi

Let clouds their visits stay, and dearth Distresses all the sea-girt earth

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்

SP (சாலமன் பாப்பையா)

உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்

MK (மு.கருணாநிதி)

கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்

Couplet

If clouds, that promised rain, deceive, and in the sky remain,Famine, sore torment, stalks o'er earth's vast ocean-girdled plain

Explanation

If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world