thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalபாயிரவியல்Paayiraviyalவான்சிறப்புVaansirappu
குறள் 12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.

Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth

Thuppaaya Thooum Mazhai

The rain begets the food we eat

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்

SP (சாலமன் பாப்பையா)

நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே

MK (மு.கருணாநிதி)

யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது

Couplet

The rain makes pleasant food for eaters rise;As food itself, thirst-quenching draught supplies

Explanation

Rain produces good food, and is itself food