வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
Vaannindru Ulakam Vazhangi Varudhalaal
Thaanamizhdham Endrunarar Paatru
The genial rain ambrosia call: The world but lasts while rain shall fall
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்
SP (சாலமன் பாப்பையா)
உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்
MK (மு.கருணாநிதி)
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது
Couplet
The world its course maintains through life that rain unfailing gives;Thus rain is known the true ambrosial food of all that lives
Explanation
By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia