thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalபாயிரவியல்Paayiraviyalவான்சிறப்புVaansirappu
குறள் 11

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

Vaannindru Ulakam Vazhangi Varudhalaal

Thaanamizhdham Endrunarar Paatru

The genial rain ambrosia call: The world but lasts while rain shall fall

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்

SP (சாலமன் பாப்பையா)

உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்

MK (மு.கருணாநிதி)

உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது

Couplet

The world its course maintains through life that rain unfailing gives;Thus rain is known the true ambrosial food of all that lives

Explanation

By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia