thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalபாயிரவியல்Paayiraviyalகடவுள் வாழ்த்துKatavul Vaazhththu
குறள் 10

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

Piravip Perungatal Neendhuvar Neendhaar

Iraivan Atiseraa Thaar

The sea of births they alone swim Who clench His feet and cleave to Him

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது

SP (சாலமன் பாப்பையா)

கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்

MK (மு.கருணாநிதி)

வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்

Couplet

They swim the sea of births, the 'Monarch's' foot who gain;None others reach the shore of being's mighty main

Explanation

None can swim the great sea of births but those who are united to the feet of God