thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalநெஞ்சொடு புலத்தல்Nenjotupulaththal
குறள் 1295

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்

அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

Peraaamai Anjum Perinpirivu Anjum

Araaa Itumpaiththen Nenju

Frets to gain and fears loss in gain O my heart suffers ceaseless pain

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.

SP (சாலமன் பாப்பையா)

என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர் இல்லாததற்குப் பயப்படும்; அவர் வந்துவிட்டால், பிரிவாரே என்று பயப்படும். ஆகவே என் நெஞ்சம் நீங்காத துன்பத்தைப் பெற்றிருக்கிறது.

MK (மு.கருணாநிதி)

என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்

Couplet

I fear I shall not gain, I fear to lose him when I gain;And thus my heart endures unceasing pain

Explanation

My soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrow