பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
Peraaamai Anjum Perinpirivu Anjum
Araaa Itumpaiththen Nenju
Frets to gain and fears loss in gain O my heart suffers ceaseless pain
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.
SP (சாலமன் பாப்பையா)
என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர் இல்லாததற்குப் பயப்படும்; அவர் வந்துவிட்டால், பிரிவாரே என்று பயப்படும். ஆகவே என் நெஞ்சம் நீங்காத துன்பத்தைப் பெற்றிருக்கிறது.
MK (மு.கருணாநிதி)
என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்
Couplet
I fear I shall not gain, I fear to lose him when I gain;And thus my heart endures unceasing pain
Explanation
My soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrow