thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalநெஞ்சொடு புலத்தல்Nenjotupulaththal
குறள் 1294

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே

துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

Inianna Ninnotu Soozhvaaryaar Nenje

Thuniseydhu Thuvvaaikaan Matru

You won't sulk first and then submit Who will then consult you, my heart?

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நெஞ்‌சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?

SP (சாலமன் பாப்பையா)

நெஞ்சே! நீ அவரைப் பார்க்கும்போது இன்பம் நுகர எண்ணுகிறாயே தவிர, அவர் தவறுகளை எண்ணி ஊடி, பிறகு உறவு கொள்ள எண்ணமாட்டாய். ஆதலால் இனி இது போன்றவற்றை உன்னோடு யார் ஆலோசனை செய்வார்? நான் செய்யமாட்டேன்.

MK (மு.கருணாநிதி)

நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை

Couplet

'See, thou first show offended pride, and then submit,' I bade;Henceforth such council who will share with thee my heart

Explanation

O my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things?