thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalஉறுப்புநலன் அழிதல்Uruppunalanazhidhal
குறள் 1239

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற

பேதை பெருமழைக் கண்.

Muyakkitaith Thanvali Pozhap Pasapputra

Pedhai Perumazhaik Kan

Cool breeze crept between our embrace Her large rain-cloud-eyes paled at once

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.

SP (சாலமன் பாப்பையா)

(அப்படி) நான் கையை மெல்ல எடுத்ததால் எங்கள் தழுவலுக்கு இடையே குளிர்ந்த சிறுகாற்று நுழைந்தது. இந்த இடைவெளியைக்கூடப் பொறுக்காமல் அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் இழந்தன. இப்போது அவை எப்படி இருக்கின்றனவோ?

MK (மு.கருணாநிதி)

இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன

Couplet

As we embraced a breath of wind found entrance there;The maid's large liquid eyes were dimmed with care

Explanation

When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow