thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalஉறுப்புநலன் அழிதல்Uruppunalanazhidhal
குறள் 1240

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே

ஒண்ணுதல் செய்தது கண்டு.

Kannin Pasappo Paruvaral Eydhindre

Onnudhal Seydhadhu Kantu

Pale eyes pained seeing the pallor Of the bright forehead of this fair

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.

SP (சாலமன் பாப்பையா)

குளிர்ந்த சிறுகாற்று இடையே நுழைந்ததைக் கண்டு நெற்றி, நிற வேறுபாடு அடைந்தது. அதன் மென்மையைப் பார்த்து வெட்கப்பட்ட கண்ணும் துன்பம் உற்றதே!

MK (மு.கருணாநிதி)

பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது

Couplet

The dimness of her eye felt sorrow now,Beholding what was done by that bright brow

Explanation

Was it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad?