thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalஉறுப்புநலன் அழிதல்Uruppunalanazhidhal
குறள் 1238

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது

பைந்தொடிப் பேதை நுதல்.

Muyangiya Kaikalai Ookkap Pasandhadhu

Paindhotip Pedhai Nudhal

The front of this fair one O paled As my clasping arms loosed their hold

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தழுவிய கை‌களைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.

SP (சாலமன் பாப்பையா)

முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கையை விட அதற்கே பொன் வளையங்களை அணிந்த அப்பேதையின் நெற்றியின் நிறம் ஒளி குறைந்ததே!

MK (மு.கருணாநிதி)

இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டு விட்டது

Couplet

One day the fervent pressure of embracing arms I checked,Grew wan the forehead of the maid with golden armlet decked

Explanation

When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow