thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalஉறுப்புநலன் அழிதல்Uruppunalanazhidhal
குறள் 1235

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு

தொல்கவின் வாடிய தோள்.

Kotiyaar Kotumai Uraikkum Thotiyotu

Tholkavin Vaatiya Thol

Bereft of bracelets and old beauty Arms tell the cruel's cruelty

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரி்ன கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.

SP (சாலமன் பாப்பையா)

வளையல்கள் கழல, முன்னைய இயற்கை அழகையும் இழந்த என் தோள்கள் கொடிய அவரின் கொடுமையைப் பேசுகின்றன.

MK (மு.கருணாநிதி)

வளையல்களும் கழன்று விழ, இருந்த அழகையும் இழந்த தோள்கள் என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன

Couplet

These wasted arms, the bracelet with their wonted beauty gone,The cruelty declare of that most cruel one

Explanation

The (loosened) bracelets, and the shoulders from which the old beauty has faded, relate the cruelty of the pitiless one