thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalஉறுப்புநலன் அழிதல்Uruppunalanazhidhal
குறள் 1234

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்

தொல்கவின் வாடிய தோள்.

Panaineengip Paindhoti Sorum Thunaineengith

Tholkavin Vaatiya Thol

Bracelets slip off the arms that have Lost old beauty for He took leave

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.

SP (சாலமன் பாப்பையா)

அவர் என்னைப் பிரிந்ததால் பழைய இயற்கை அழகை இழந்த என் தோள்கள், இப்போது வளையல்களும் கழலும்படி மெலிந்திருக்கின்றன.

MK (மு.கருணாநிதி)

பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக

Couplet

When lover went, then faded all their wonted charms,And armlets' golden round slips off from these poor wasted arms

Explanation

In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose