தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.
Thotiyotu Tholnekizha Noval Avaraik
Kotiyar Enakkooral Nondhu
Arms thin, armlets loose make you call My sire cruel; that pains my soul
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.
SP (சாலமன் பாப்பையா)
வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன்.
MK (மு.கருணாநிதி)
என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்
Couplet
I grieve, 'tis pain to me to hear him cruel chid,Because the armlet from my wasted arm has slid
Explanation
I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened