thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalபொழுதுகண்டு இரங்கல்Pozhudhukantirangal
குறள் 1226

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத

காலை அறிந்த திலேன்.

Maalainoi Seydhal Manandhaar Akalaadha

Kaalai Arindha Thilen

Evening pangs I have not known When my lord nev'r left me alone

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.

SP (சாலமன் பாப்பையா)

முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை.

MK (மு.கருணாநிதி)

மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை

Couplet

The pangs that evening brings I never knew,Till he, my wedded spouse, from me withdrew

Explanation

Previous to my husband's departure, I know not the painful nature of evening