thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalபொழுதுகண்டு இரங்கல்Pozhudhukantirangal
குறள் 1225

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்

மாலைக்குச் செய்த பகை?

Kaalaikkuch Cheydhanandru Enkol Evankolyaan

Maalaikkuch Cheydha Pakai?

What good have I done to morning And what evil to this evening?

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?

SP (சாலமன் பாப்பையா)

காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்கு நான் செய்த தீமை என்ன?

MK (மு.கருணாநிதி)

மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் ``காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன?'' என்று புலம்புகிறது

Couplet

O morn, how have I won thy grace? thou bring'st reliefO eve, why art thou foe! thou dost renew my grief

Explanation

O eve, why art thou foe! thou dost renew my grief