thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalபொழுதுகண்டு இரங்கல்Pozhudhukantirangal
குறள் 1224

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து

ஏதிலர் போல வரும்.

Kaadhalar Ilvazhi Maalai Kolaikkalaththu

Edhilar Pola Varum

Lover away, comes eventide Like slayer to field of homicide

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது.

SP (சாலமன் பாப்பையா)

அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது.

MK (மு.கருணாநிதி)

காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது

Couplet

When absent is my love, the evening hour descends,As when an alien host to field of battle wends

Explanation

In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter