thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalபொழுதுகண்டு இரங்கல்Pozhudhukantirangal
குறள் 1227

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலரும்இந் நோய்.

Kaalai Arumpip Pakalellaam Podhaaki

Maalai Malarumin Noi

Budding at dawn burgeoning all day This disease blooms in evening gay

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.

SP (சாலமன் பாப்பையா)

காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.

MK (மு.கருணாநிதி)

காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்

Couplet

My grief at morn a bud, all day an opening flower,Full-blown expands in evening hour

Explanation

This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening