நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.
Nanavinaal Namneeththaar Enpar Kanavinaal
Kaanaarkol Ivvoo Ravar
The townsmen say he left me thus In dreams failing to see him close
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
நனவில் நம்மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?
SP (சாலமன் பாப்பையா)
என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று என்னவரை ஏசும் இவ்வூர்ப் பெண்கள், அவர் நாளும் என் கனவில் வருவதைக் கண்டு அறியாரோ?
MK (மு.கருணாநிதி)
என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?
Couplet
They say, that he in waking hours has left me lone;In dreams they surely see him not,- these people of the town;
Explanation
The women of this place say he has forsaken me in my wakefulness I think they have not seen him visit me in my dreams