thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalபொழுதுகண்டு இரங்கல்Pozhudhukantirangal
குறள் 1221

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்

வேலைநீ வாழி பொழுது.

Maalaiyo Allai Manandhaar Uyirunnum

Velainee Vaazhi Pozhudhu

Bless you! you are not eventide But killing dart to wedded bride!

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!

SP (சாலமன் பாப்பையா)

பொழுதே! நீ வாழ்க! முன்பெல்லாம் வருவாயே அந்த மாலையா நீ என்றால் இல்லை; திருமணம் செய்து கொண்ட பெண்களின் உயிரை வாங்கும் பொழுது நீ.

MK (மு.கருணாநிதி)

நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!

Couplet

Thou art not evening, but a spear that doth devourThe souls of brides; farewell, thou evening hour

Explanation

Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married) women