நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.
Nanavinaal Nalkaarai Novar Kanavinaal
Kaadhalark Kaanaa Thavar
In dreams who don't discern lovers Rue their missing in wakeful hours
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத காதலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.
SP (சாலமன் பாப்பையா)
இன்னும் திருமணம் ஆகாத, ஆகிக் கணவனைப் பிரிந்து அறியாத இந்தப் பெண்கள், கனவில் காதலனைக் கண்டு அறியாதவர், ஆதலால், அவர்கள் அறிய நேரில் வந்து என்னிடம் அன்பு காட்டாத என்னவரை அன்பற்றவர் என்று ஏசுகின்றனர்.
MK (மு.கருணாநிதி)
கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்
Couplet
In dreams who ne'er their lover's form perceive,For those in waking hours who show no love will grieve
Explanation
They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours