thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalகனவுநிலை உரைத்தல்Kanavunilaiyuraiththal
குறள் 1218

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்

நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

Thunjungaal Tholmelar Aaki Vizhikkungaal

Nenjaththar Aavar Viraindhu

Asleep he embraces me fast; Awake he enters quick my heart

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்‌.

SP (சாலமன் பாப்பையா)

என் நெஞ்சில் எப்போதும் வாழும் என்னவர் நான் உறங்கும் போது என் தோளின் மேல் கிடக்கிறார். விழித்துக் கொள்ளும் போதோ வேகமாக என் நெஞ்சிற்குள் நுழைந்து கொள்கிறார்.

MK (மு.கருணாநிதி)

தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்

Couplet

And when I sleep he holds my form embraced;And when I wake to fill my heart makes haste

Explanation

When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul