thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalகனவுநிலை உரைத்தல்Kanavunilaiyuraiththal
குறள் 1217

நனவினால் நல்காக் கொடியார் கனவனால்

என்எம்மைப் பீழிப் பது.

Nanavinaal Nalkaak Kotiyaar Kanavanaal

Enemmaip Peezhip Padhu

Awake he throws my overtures Adream, ah cruel! he tortures!

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?

SP (சாலமன் பாப்பையா)

நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?

MK (மு.கருணாநிதி)

நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?

Couplet

The cruel one, in waking hour, who all ungracious seems,Why should he thus torment my soul in nightly dreams

Explanation

The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?