காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalகனவுநிலை உரைத்தல்Kanavunilaiyuraiththal
குறள் 1216
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.
Nanavena Ondrillai Aayin Kanavinaal
Kaadhalar Neengalar Man
If wakeful hours come to nought My lov'r in dreams would nev'r depart
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.
SP (சாலமன் பாப்பையா)
கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்.
MK (மு.கருணாநிதி)
நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே
Couplet
And if there were no waking hour, my loveIn dreams would never from my side remove
Explanation
Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me