thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalநினைந்தவர் புலம்பல்Ninaindhavarpulampal
குறள் 1207

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்

உள்ளினும் உள்ளம் சுடும்.

Marappin Evanaavan Markol Marappariyen

Ullinum Ullam Sutum

What will happen if I forget When his memory burns my heart?

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?

SP (சாலமன் பாப்பையா)

அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது எப்படி?

MK (மு.கருணாநிதி)

மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?

Couplet

If I remembered not what were I then? And yet,The fiery smart of what my spirit knows not to forget

Explanation

I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?