thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalநினைந்தவர் புலம்பல்Ninaindhavarpulampal
குறள் 1208

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ

காதலர் செய்யும் சிறப்பு.

Enaiththu Ninaippinum Kaayaar Anaiththandro

Kaadhalar Seyyum Sirappu

I bring him to ceaseless memory He chides not; and thus honours me

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!

SP (சாலமன் பாப்பையா)

அவரை நான் எப்படி எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது அன்றோ!

MK (மு.கருணாநிதி)

எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா?

Couplet

My frequent thought no wrath excites It is not so?This honour doth my love on me bestow

Explanation

He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved