thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalநினைந்தவர் புலம்பல்Ninaindhavarpulampal
குறள் 1206

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடி யான்

உற்றநாள் உள்ள உளேன்.

Matriyaan Ennulen Manno Avaroti

Yaan Utranaal Ulla Ulen

Beyond the thought of life with him What else of life can I presume?

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?

SP (சாலமன் பாப்பையா)

அவரோடு கூடி வாழ்ந்த நாள்களின் நினைவுகளை நினைப்பதால்தான் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன். இல்லை என்றால், வேறு எதனால் வாழ்வேன்?

MK (மு.கருணாநிதி)

நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்?

Couplet

How live I yet? I live to ponder o'erThe days of bliss with him that are no more

Explanation

I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?