thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalநினைந்தவர் புலம்பல்Ninaindhavarpulampal
குறள் 1205

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்

எம்நெஞ்சத்து ஓவா வரல்.

Thamnenjaththu Emmaik Katikontaar Naanaarkol

Emnenjaththu Ovaa Varal

Shame! My heart often he enters Banning me entry into his

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?

SP (சாலமன் பாப்பையா)

தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?

MK (மு.கருணாநிதி)

அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்

Couplet

Me from his heart he jealously excludes:Hath he no shame who ceaseless on my heart intrudes

Explanation

He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine