thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalபடர்மெலிந் திரங்கல்Patarmelindhirangal
குறள் 1161

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு

ஊற்றுநீர் போல மிகும்.

Maraippenman Yaaniqdho Noyai Iraippavarkku

Ootruneer Pola Mikum

It swells out like baled out spring How to bear this pain so writhing?

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.

SP (சாலமன் பாப்பையா)

என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்துவிடக்கூடாது என்று மறைக்கவே செய்தேன்; ஆனாலும் இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல மறைக்க மறைக்க என் துன்பமும் பெருகவே செய்கிறது.

MK (மு.கருணாநிதி)

இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்

Couplet

I would my pain conceal, but see! it surging swells,As streams to those that draw from ever-springing wells

Explanation

I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it