thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalபடர்மெலிந் திரங்கல்Patarmelindhirangal
குறள் 1162

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு

உரைத்தலும் நாணுத் தரும்.

Karaththalum Aatrenin Noyainoi Seydhaarkku

Uraiththalum Naanuth Tharum

I can't conceal this nor complain For shame to him who caused this pain

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.

SP (சாலமன் பாப்பையா)

இந்தத் துன்பத்தை என்னால் மறைக்கவும் முடியவில்லை. துன்பத்தைத் தந்த இவருக்கு (எழுத்தில் தொலைபேசியில்) இதைச் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது.

MK (மு.கருணாநிதி)

காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை; இதற்குக் காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை

Couplet

I cannot hide this pain of mine, yet shame restrainsWhen I would tell it out to him who caused my pains

Explanation

I cannot conceal this pain, nor can I relate it without shame to him who has caused it