thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalபிரிவு ஆற்றாமைPirivaatraamai
குறள் 1160

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

பின்இருந்து வாழ்வார் பலர்.

Aridhaatri Allalnoi Neekkip Pirivaatrip

Pinirundhu Vaazhvaar Palar

Many survive pangs of parting Not I this sore so distressing

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு,( பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும், விட்டு பிரிந்த பின் பொருத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.

SP (சாலமன் பாப்பையா)

சம்பாதிப்பதற்குக் கணவன் பிரிந்தால் அவன் பிரிவைத் தாங்கிக் கொண்டு, பிரிவுத் துன்பத்தையும், விட்டுவிட்டு, அரிய செயலாற்றி உயிர் வாழும் பெண்கள் பலர் இருக்கின்றனர்.

MK (மு.கருணாநிதி)

காதலர் பிரிந்து செல்வதற்கு ஒப்புதல் அளித்து, அதனால் ஏற்படும் துன்பத்தைப் போக்கிக் கொண்டு, பிரிந்த பின்னும் பொறுத்திருந்து உயிரோடு வாழ்பவர் பலர் இருக்கலாம்; ஆனால் நான்?

Couplet

Sorrow's sadness meek sustaining, Driving sore distress away,Separation uncomplaining Many bear the livelong day

Explanation

As if there were many indeed that can consent to the impossible, kill their pain, endure separation and yet continue to live afterwards