thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalஅலர் அறிவுறுத்தல்Alararivuruththal
குறள் 1147

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்

நீராக நீளும்இந் நோய்.

Ooravar Kelavai Eruvaaka Annaisol

Neeraaka Neelumin Noi

Scandal manures; mother's refrain Waters the growth of this love-pain

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

SP (சாலமன் பாப்பையா)

இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.

MK (மு.கருணாநிதி)

ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது

Couplet

My anguish grows apace: the town's reportManures it; my mother's word doth water it

Explanation

This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother