thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalஅலர் அறிவுறுத்தல்Alararivuruththal
குறள் 1148

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்

காமம் நுதுப்பேம் எனல்.

Neyyaal Erinudhuppem Endratraal Kelavaiyaal

Kaamam Nudhuppem Enal

To quench the lust by rumour free Is to quench fire by pouring ghee

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.

SP (சாலமன் பாப்பையா)

இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம்.

MK (மு.கருணாநிதி)

ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்

Couplet

With butter-oil extinguish fire! 'Twill proveHarder by scandal to extinguish love

Explanation

To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee