thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalஅலர் அறிவுறுத்தல்Alararivuruththal
குறள் 1145

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

வெளிப்படுந் தோறும் இனிது.

Kaliththorum Kalluntal Vettatraal Kaamam

Velippatun Thorum Inidhu

Drink delights as liquor flows Love delights as rumour grows

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.

SP (சாலமன் பாப்பையா)

கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல் எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது.

MK (மு.கருணாநிதி)

காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும்

Couplet

The more man drinks, the more he ever drunk would be;The more my love's revealed, the sweeter 'tis to me

Explanation

As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour