thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalஅலர் அறிவுறுத்தல்Alararivuruththal
குறள் 1144

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்

தவ்வென்னும் தன்மை இழந்து.

Kavvaiyaal Kavvidhu Kaamam Adhuvindrel

Thavvennum Thanmai Izhandhu

Rumour inflames the love I seek Or else it becomes bleak and weak

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.

SP (சாலமன் பாப்பையா)

ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது சுவையற்றுச் சப்பென்று போயிருக்கும்.

MK (மு.கருணாநிதி)

ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய் விடும்

Couplet

The rumour rising makes my love to rise;My love would lose its power and languish otherwise

Explanation

Rumour increases the violence of my passion; without it it would grow weak and waste away