thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalஅலர் அறிவுறுத்தல்Alararivuruththal
குறள் 1141

அலரெழ ஆருயிர் ந஧ற்கும் அதனைப்

பலரறியார் பாக்கியத் தால்.

Alarezha Aaruyir Na�rkum Adhanaip

Palarariyaar Paakkiyath Thaal

Rumour sustains my existence Good luck! many know not its sense

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.

SP (சாலமன் பாப்பையா)

ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்யம்.

MK (மு.கருணாநிதி)

எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள்

Couplet

By this same rumour's rise, my precious life stands fast;Good fortune grant the many know this not

Explanation

My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of