thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalநாணுத் துறவுரைத்தல்Naanuththuravuraiththal
குறள் 1140

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்

யாம்பட்ட தாம்படா ஆறு.

Yaamkannin Kaana Nakupa Arivillaar

Yaampatta Thaampataa Aaru

Fools laugh at me before my eyes For they feel not my pangs and sighs

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.

SP (சாலமன் பாப்பையா)

நான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!

MK (மு.கருணாநிதி)

காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்

Couplet

Before my eyes the foolish make a mock of me,Because they ne'er endured the pangs I now must drie

Explanation

Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered