thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalநாணுத் துறவுரைத்தல்Naanuththuravuraiththal
குறள் 1139

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்

மறுகின் மறுகும் மருண்டு.

Arikilaar Ellaarum Endreen Kaamam

Marukin Marukum Maruntu

My perplexed love roves public street Believing that none knows its secret

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

SP (சாலமன் பாப்பையா)

என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.

MK (மு.கருணாநிதி)

என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!

Couplet

'There's no one knows my heart,' so says my love,And thus, in public ways, perturbed will rove

Explanation

And thus, in public ways, perturbed will rove