நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
Niraiyariyar Manaliyar Ennaadhu Kaamam
Maraiyirandhu Mandru Patum
Lust betrays itself in haste Though women are highly soft and chaste
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே.
SP (சாலமன் பாப்பையா)
இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது.
MK (மு.கருணாநிதி)
பாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்
Couplet
In virtue hard to move, yet very tender, too, are we;Love deems not so, would rend the veil, and court publicity
Explanation
Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it)