thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalநாணுத் துறவுரைத்தல்Naanuththuravuraiththal
குறள் 1137

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்

பெண்ணின் பெருந்தக்க தில்.

Katalanna Kaamam Uzhandhum Mataleraap

Pennin Perundhakka Thil

Her sea-like lust seeks not Madal! Serene is woman's self control

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.

SP (சாலமன் பாப்பையா)

அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை.

MK (மு.கருணாநிதி)

கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை

Couplet

There's nought of greater worth than woman's long-enduring soul,Who, vexed by love like ocean waves, climbs not the 'horse of palm'

Explanation

There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust