மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.
Mataloordhal Yaamaththum Ulluven Mandra
Patalollaa Pedhaikken Kan
Madal I ride at midnight for My eyes sleep not seeing this fair
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.
SP (சாலமன் பாப்பையா)
அவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன்.
MK (மு.கருணாநிதி)
காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்
Couplet
Of climbing 'horse of palm' in midnight hour, I think;My eyes know no repose for that same simple maid
Explanation
Mine eyes will not close in sleep on your mistress's account; even at midnight will I think of mounting the palmyra horse