மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
Malaranna Kannaal Arumai Ariyaadhu
Alaremakku Eendhadhiv Voor
Rumour gives me the flower-like belle People know not what rare angel
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.
SP (சாலமன் பாப்பையா)
மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது.
MK (மு.கருணாநிதி)
அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது
Couplet
The village hath to us this rumour giv'n, that makes her mine;Unweeting all the rareness of the maid with flower-like eyne
Explanation
Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me