தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
Thakudhi Enavondru Nandre Pakudhiyaal
Paarpattu Ozhukap Perin
Equity is supreme virtue It is to give each man his due
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
SP (சாலமன் பாப்பையா)
பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.
MK (மு.கருணாநிதி)
பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்
Couplet
If justice, failing not, its quality maintain,Giving to each his due, -'tis man's one highest gain
Explanation
That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue