எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
Ennandri Kondraarkkum Uyvuntaam Uyvillai
Seynnandri Kondra Makarku
The virtue-killer may be saved Not benefit-killer who is damned
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
SP (சாலமன் பாப்பையா)
எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை
MK (மு.கருணாநிதி)
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை
Couplet
Who every good have killed, may yet destruction flee;Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free
Explanation
He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit