thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalநடுவு நிலைமைNatuvu Nilaimai
குறள் 112

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி

எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

Seppam Utaiyavan Aakkanj Chidhaivindri

Echchaththir Kemaappu Utaiththu

Wealth of the man of equity Grows and lasts to posterity

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

SP (சாலமன் பாப்பையா)

நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்

MK (மு.கருணாநிதி)

நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்

Couplet

The just man's wealth unwasting shall endure,And to his race a lasting joy ensure

Explanation

The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity